search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீக்குளிக்க முயன்ற பெண்"

    • எனது பேத்தி திவ்யா (17). எனது வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். அப்போது விராலிபட்டியை சேர்ந்த மகேந்திரன் (28) என்பவரை காதலித்து அவருடன் சென்று விட்டார்.
    • மைனர் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என எடுத்துக் கூறியும், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாலும் நியாயம் கிடைக்காது என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பழைய வத்தலக்குண்டு மாரியம்மன் கோவில் தெருைவ சேர்ந்த தனலட்சுமி (49) என்பவர் மனு அளிக்க வந்தார்.

    திடீரென அவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் தெரிவிக்கையில்,

    எனது மகள் பானுப்பிரியாவுக்கும், கணேசன் என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணேசன் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். எனது மகளும் சென்னையிலேயே வசித்து வருகிறார். அவர்கள் மகளான எனது பேத்தி திவ்யா (17). எனது வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். அப்போது விராலிபட்டியை சேர்ந்த மகேந்திரன் (28) என்பவரை காதலித்து அவருடன் சென்று விட்டார்.

    இதுகுறித்து போலீசார் மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த மகேந்திரன் எனது பேத்தி திவ்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். இதை அறிந்து நான் அங்கு சென்று திவ்யாவை என்னுடன் வருமாறு அழைத்தேன். அதற்கு மகேந்திரனின் குடும்பத்தினர் அனுப்ப மறுத்துவிட்டனர்.

    மைனர் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாலும் நியாயம் கிடைக்காது என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என்றார். இதனை தொடர்ந்து அவரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஆரியநல்லூரை சேர்ந்தவர் பாக்கியநாதன் (67). இவர் தனக்கு பட்டா வழங்கக் கேட்டு பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு தீக்குளிக்க வந்தார். அவரிடம் இருந்த பாட்டிலை பறித்துக் கொண்ட போலீசார் மனு அளித்து செல்லுமாறு அறிவுறுத்தினர். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடுத்தடுத்து 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடனை திருப்பித் தரவில்லை என போலீஸ் நிலையத்தில் செல்வி அளித்த புகார் அளித்தார்.
    • சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சந்திரசேகர், வளர்மதி, கதிர்வேல் தம்பதியினரை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவரது மகள் வளர்மதி மற்றும் மருமகன் கதிர்வேல்.

    இவர்கள் சிக்கரச ம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்,செல்வி தம்பதியிடம் கடந்த 2019-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக 2.50 லட்சம் ரூபாய் பணம், 4 பவுன் நகை கடனாக வாங்கியுள்ளனர்.

    இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த செந்தில், செல்வி தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதையடுத்து கடன் பெற்ற வளர்மதி, கதிர்வேல் தம்பதியிடம் செல்வி நீங்கள் வாங்கிய கடன் தொகையை என்னிடம் அளிக்குமாறு கேட்டுள்ளார்.

    இதேபோல் செல்வியின் கணவர் செந்தில் ஒருபுறம் தன்னிடம் தான் பணம் நகை கொடுக்க வேண்டும் என்று வளர்மதி -கதிர்வேலிடம் கேட்டுள்ளார்.

    இந்த சூழ்நிலையில் கடனை அடைக்க வளர்மதி-கதிர்வேல் தம்பதியினர் கால அவகாசம் கேட்டுள்ளனர். இருப்பினும் கடனை திருப்பித் தரவில்லை என போலீஸ் நிலையத்தில் செல்வி அளித்த புகார் அளித்தார்.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சந்திரசேகர், வளர்மதி, கதிர்வேல் தம்பதியினரை டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினார். அதன் பின்னர் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதனால் அச்சமடைந்த வளர்மதி, கதிர்வேல் ஆகிய 2 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாயமாகிவிட்டனர். தனது மகள் மருமகனை, கிருஷ்ணவேணி பல்வேறு இடங்களிலும் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் நேற்று கிருஷ்ணவேணி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது கிருஷ்ணவேணி திடீரென தான் கொண்டு வந்த மண்எண்ணை கேனை திறந்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடி வந்து அவரை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கலையரசி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டார்.
    • கலெக்டர் அலுவலகம் எதிரில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது ‌

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டா நூலஅள்ளி அருகே உள்ள எம். சவுளூர் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி கலையரசி (வயது 32).

    இவர்கள் 25 வருடமாக அந்தப் பகுதியில் உள்ள 7 சென்ட் நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும் அந்த இடத்தை மிட்டாநூல அள்ளியின் பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வருவதாகவும், வீட்டில் இருந்து வெளியேறாமல் இருப்பதற்காக வீட்டை சுற்றி வேலி அமைத்து தொல்லை தருவதாகவும் இது சம்பந்தமாக தருமபுரி கலெக்டர் மற்றும் எஸ்.பி. அலுவலகம், பொருளாதார குற்றப்பிரிவு, அதியமான் கோட்டை காவல் நிலையம், உள்ளிட்ட இடங்களில் மனு கொடுத்தோம்.

    இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கலையரசி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட ர்.

    கலெக்டர் அலுவலகம் எதிரில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது ‌

    ×